Search This Blog

Friday, 24 June 2011

2) அறிவு என்றால் என்ன?

2) அறிவு என்றால் என்ன?
     அறிவு என்பது உணர்தலாலும்,அனுபவத்தாலும்,கற்பதாலும் கிடைக்கப்பெறுபவைகளாகும்.அறிவு என்பது ஒருவருக்கு பிறப்பு முதல் இறப்பு வரை கிடைப்பவைகளாகவே உள்ளன.ஆனால் படித்தவர்களுக்கு மட்டுமேஅறிவு இருப்பது போன்றும்,அறிஞர்கள் என்றும் ஒரு தோற்றப்பாடு பொதுவாக எல்லோரிடமும் காணப்படுகின்றன.அத்தோற்றப்பாடு முற்றிலும் தவறானது. அறிவு விலங்குகள் உட்பட எல்லோருக்கும் உண்டு. அவற்றை இயற்கையறிவு,உணர்வறிவு,படிப்பறிவு, பட்டறிவு (அனுபவ அறிவு),கல்வியறிவு,தொழில்சார் அறிவு,பொது அறிவு,ஆழ்மனப்பதிவறிவு- என அறிவானது பலவகைகளாகப் பிரிக்கலாம்.

No comments:

Post a Comment